2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மருந்தகத்தில் கப்பம் கோரிய மூவர் சிக்கினர்

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசி அழைப்பின் ஊடாக மருந்தகமொன்றில் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபர்கள் 03 பேர், நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கப்பமாக கோரிய தொகையை பெற்றுக்கொள்வதற்காக வந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிரான மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31,32 மற்றும் 42 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .