2025 ஜூலை 16, புதன்கிழமை

மருந்து வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொவிட் 19 பரவலையடுத்து, மருந்து வகைகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக, அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய,  பெரசிட்டமோல் மற்றும் சுகாவசக் கோளாறுகளுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீரிழிவு, குருதி அமுக்கம், கொலஸ்ட்ரோல் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான மருந்து வகைகளையும் அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்நாட்ட்டில் 20 சதவீதம் மருந்து வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 60-75 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X