Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.
இராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இதனை கேள்வியுற்ற சந்தேகநபர், வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து இரவு வேளையில் வீட்டிற்குள் சென்று இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு இராஜாங்கனை பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸ்ரீ லால் மகேஷ் தலங்கல்ல, தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் நுவன் கௌசல்ய உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago