2025 ஜூன் 02, திங்கட்கிழமை

மிஹிந்தலையில் ’பொசன் போயா’ தினம்

S.Renuka   / 2025 ஜூன் 01 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் போசன் போயா தினத்தையொட்டி, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் "அரஹத் மஹிந்த தேரரின் காலத்தால் அழியாத செய்தி மூலம் உலகம் அமைதியைப் பெறட்டும்" என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் (ஜூன்) 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை முழு அரச ஆதரவுடன் தேசிய பொசன் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொசன் தின சமயச் சடங்குகள் அனைத்தும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வளவாஹெங்குனவே தம்மரதன நாயக்க தேரரின் வழிகாட்டுதல் மற்றும் அனுசரணையில் நடைபெறும்.

இந்தக் காலகட்டத்தில் மிஹிந்தலைக்கு வரும் யாத்ரீகர்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. 

இந்த காலகட்டங்களில் பொசன் வாரத்தில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .