2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மஹாவலி கங்கைக்கருகிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2019 மே 06 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மஹாவலி கங்கைக்கருகிலுள்ள பாலத்துக்கு அருகிலிருந்து சில கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு வாள்கள், கோடாரி, ஆறு கத்திகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பகுதியில் வசிப்பவர்கள் யாரேனும் இதனை கொண்டுவந்து போட்டிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .