2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மஹிந்தவிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.க. எம்.பி

Editorial   / 2019 மே 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய​ தேசியக் கட்சியின் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளனர்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள  பாதுகாப்பற்ற நிலையிலிருந்து எமது நாட்டை மீட்டெடுப்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகலொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரின் கையொப்பத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவால் நேற்று மாலை  மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .