2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’மஹிந்தவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை’

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பின், அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் இன்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவினால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் ஜனாதிபதியைப் பாதுகாத்துக்கொள்வது, அரசாங்கத்தின் கடமையென்றார்.

இந்நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் கூறினார். அத்துடன், ஏற்கெனவே, மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் ஹவுஸ், விஜேராம மற்றும் மெதமுலன இல்லங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதென்றும் அவர் தொடர்ந்தும் அரசியலில் தொடருவாரெனில், விசேட அதிரடிப் படையினரை, விசேட பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதன்போது பேசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுமென வாக்குறுதி அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .