2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மஹிந்தவுக்கும் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட, மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் இராணுவத் தளபதிகளான தயா தென்னக்கோன், ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப்படைத் தளபதியான ரொசான் குணதிலக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருடனே மஹிந்த கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, பெஷில் ராஜபக்‌ஷ, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .