2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீதான விசாரணை, ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஒத்திவைத்து, உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி இன்று (19) உத்தரவிட்டார்.

அமைச்சராக இருந்த போது, 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிக செலவில், கொழும்பு - கின்சி வீதியில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்தமை ஊடாக, நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தாகக் கூறி, சட்ட மா அதிபரால், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ​இன்று (19) நடந்த போதிலும்,  பிரதிவாதி மஹிந்தானந்த அளுத்கமகே, மன்றத்தில் ஆஜராகவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாலேயே அவர் மன்றில் ஆஜராகவில்லை என, அவர் சார்பில் மன்றில் சட்டத்தரணி அறிவித்த நிலையிலேயே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .