2025 ஜூன் 28, சனிக்கிழமை

மஹியங்கனை விபத்தில் இருவர் காயம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உஹனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணஞ்செய்கையில், குறித்த மோட்டார் சைக்கிளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ள நிலையில், அதில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த மோட்டார் சைக்கிளை வீதியோரம் நிறுத்த முற்பட்ட வேளையில், பின்னாலிருந்து வந்த மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுபாட்டை இழந்த நிலையில், மோதியமையால் குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .