2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாத்தறை – ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலை விரைவில் திறக்கப்படும்

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை, கொடகமவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான வீதி இந்த வருட இறுதிக்குள் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று, வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

இதன் மொத்த தூரம் 96 கிலோமீற்றர் ஆகும். இது 04 கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டம் கொடகம முதல் பெலியத்தை வரையிலும், இரண்டாம் கட்டம் பெலியத்தை முதல் வெடிய வரையிலும், மூன்றாம் கட்டம் வெடிய முதல் அந்தருவெவ வரையிலும், நான்காம் கட்டம் மத்தளை வரையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ள மொத்த தொகை 242 பில்லியன் ரூபாயாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .