Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வருமாறு குறித்த உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகரசபை தகவல்கள தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் 60 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், மாநகரசபை மேயர் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் சிலரை நீக்க வேண்டும் என, உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமையிடம் வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த குழுவினர், ரோசி சேனாநாயக்கவை நீக்கிவிட்டு அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள நபரை மாநகரசபை மேயராக நியமிக்க வேண்டும் என, யோசனை முன்வைக்கவுள்ளதாகவும், மற்றுமொரு தரப்பினர் மற்றுமொருவரை நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பு மாநகரசபை மேயராக ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
1 hours ago