2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாரவில தொழிற் பயிற்சி நிலையம் சேதம்

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

மாரவில-மூதுகட்டுவ பிரதேசத்தில் இயங்கிவரும், தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையத்தின் மீது, நேற்று (06) இரவு, இரண்டு மரங்கள் முறிந்து விழுந்துள்ளதையடுத்து, பயிற்சி நிலையத்துக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மழையுடனான கடும் காற்றையடுத்து,  ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளனவென,  புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளில், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .