2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மாலுமிகள் இடைமாறலை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஊடாக முன்னெடுக்கப்படும் மாலுமிகள் இடைமாறும் முறையை உடனடியாக இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவைப் ​பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வரும் மாலுமிகள் தாம் பணியாற்றும் கப்பல்களுக்கு இடைமாறும் மத்திய நிலையமாக கொழும்பு துறைமுகத்தை கடந்த சில வாரங்களாகப் பயன்படுத்தி வந்ததாகவும் இந்த செயற்பாட்டையே ஜனாதிபதி நிறுத்தியுள்ளதாக ​அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு வரும் மாலுமிகள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இவர்களுக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X