2025 ஜூன் 28, சனிக்கிழமை

மின்சார பிரச்சினையைத் தீர்க்க குழு​வொன்று நியமனம்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பிரச்சினையின் தீர்வுக்காக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்காக, நீண்டகால, குறுகிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஊடாக பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசீம், சாகல ரத்னாயக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்ததுடன், இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .