2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மின்சாரக் கட்டணத்துக்கான நிவாரணத்தை ’ அரசாங்கம் வழங்க வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 மாதத்துக்கான மின்சாரக் கட்டணத்தை அரசாங்கம் ஒரே தடவையில் மக்களுக்கு விநியோகித்துள்ளதாகத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன்,  3 மாதங்களாக  இந்த மக்களை முடக்கி வைத்திருந்த அரசாங்கம், மக்களுக்கு ஒரே தடவையில் 3  மாதத்துக்கான கட்டணத்தை அறவிடாது, ஒரு மாதத்துக்கான கட்டணத்தை மாத்திரம் அறவிடும் வகையிலான  நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று  (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த அரசாங்கம் 3 மாதம் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருந்த நிலையில், மக்கள் எவ்வித வருமானங்களையும் தேடிகொள்ள வழியின்றி வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். இவ்வாறான நிலையில் மக்களுக்கு ஒரே தடவையில் மின்சாரக் கட்டணத்தை அரசாங்கம் விநியோகித்துள்ளதால், ​எவ்வாறு இக்கட்டணங்களை செலுத்துவது என்று மக்கள் செய்வதறியாது இருப்பதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .