2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மின்தடை காலம் அதிகரிக்கும் வாய்ப்பு

Freelancer   / 2022 மே 05 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி  இயந்திரம்  ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும்  20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்  மேலும் தெரிவித்துள்ளது. 

இதனிடையே நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமெனஇலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 இதற்கமைய, 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை5 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படஉள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு9 மணி  வரையான  காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன் 'சி சி' வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதிகளில்  3 மணித்தியாலயங்கள் மின்விநியோகத் தடை ஏற்படுத்தப்படும் எனஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7