2026 ஜனவரி 21, புதன்கிழமை

மின்னல் தாக்கத்தில் 17 பேர் பாதிப்பு; ஒருவரின் நிலைக் கவலைக்கிடம்

Kogilavani   / 2021 மே 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா, எம்.கிருஸ்ணா

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில், இன்று(23)  காலை மின்னல் தாக்கியதன் காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், 17 ஆண்கள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்திய அதிகாரி கணேசன் தெரிவித்தார்.

தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே,  காலை 10-30 மணியளவில் இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
குறித்தப் பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது மின்னல் தாக்கி தெரித்தபோது,  அருகில் வேலை செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
 
மேலும் சிலர் தப்பி ஓட முற்பட்டு சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X