2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மின்னல் தாக்கத்தில் விவசாயி பலி

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம் நூர்தீன்

மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி - பெரியவெட்டை எனும் வயல் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த  குறித்த விவசாயி,  மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கர​டியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .