2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மிரிஹான சம்பவம்; 15 பேரிடம் CID வாக்குமூலம்

R.Maheshwary   / 2022 மே 02 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டனர்.

மிரிஹான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வைப் பெற்றுத் தருமாறு தெரிவித்து,  மார்ச் மாதம் 31ஆம் திகதி, மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்துக்கு அருகில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 54 பேர் பொலிஸாரால் கைதுசெய்யபட்டிருந்தனர்.

இவர்களுள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள குற்றவிசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7