2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மிருசுவில் கொலை குற்றவாளிக்கு விடுதலை; சுமந்திரன் கண்டனம்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலையின் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க,  ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், இன்று(26) விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவரென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான குற்றங்கள் தண்டிக்கப்பட மாட்டா என்பதை இது உறுதி செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .