Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாய் கடித்தமைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நபரொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் மரணித்த சம்பவமொன்று தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கலேவெல தேவஹூவ ஹீனுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் நாய்யொன்று அவரை கடித்துவிட்டதென, அந்த நபர், தன்னுடைய தாய்க்கு தெரிவித்துள்ளார். அவர், சிகிச்சைபெற்றுக்கொள்ளாது, அந்த காயத்தின் மேல், மிளகாய்தூளை தூவி, காயம் காய்ந்துவிடுமென, உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், உடலில் ஏற்பட்ட சில மாற்றங்களை அடுத்து, நேற்று பிற்பகல், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனைக்குப் பின்னர், சில மணிநேரத்திலேயே மரணித்துவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
50 minute ago