2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மீண்டும் ஐ.தே.க வில் இணைய வாய்ப்பு

S. Shivany   / 2021 மார்ச் 11 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான வாய்ப்பை வழங்க ஐ.தே.க தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 44 பேர் ஐ.தே.க வில் இணைநதுள்ளனர் எனவும் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .