Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான முகப்பூச்சு கிரீம்கள் (Skin Creams) மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் கலந்திருப்பது ஆய்வக சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த அழகு சாதன தயாரிப்புகளில், அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை விடவும் அதிகப்படியான கன உலோகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை நுகர்வோருக்குப் பாரிய உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளின் பட்டியல், அவற்றின் வர்த்தக பெயர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உலோக செறிவு குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அதிகார சபை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 49 வகையான தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் இத்தகைய கிரீம்கள் மற்றும் லோஷன்களை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடைசெய்யப்பட்ட இந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலதிகமாக அறிவித்துள்ளது.
பாறுக் ஷிஹான்



38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago