Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 08 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும், தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரால், நேற்று (07) இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய றவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தத்தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என்றும் பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பும் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 03ஆம் திகதியிலிருந்து, குறித்த அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிருந்து தாங்களாகவே விலகியுள்ளனர் என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோருக்கு, பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து முஸ்லிம் தலைவர்கள் 9 பேர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago