2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’முஸ்லிம்களுக்கு புதிய தலைமையே தேவை’

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார்.

கண்டியில் நேற்று (07) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரரேரணைகள் வெற்றிபெறுமா என்பதை விட, மக்களின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்பதில்தான், தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டில், அரசியல் கொள்கையொன்று இல்லாதது, ​ஒரு பாரிய குறையாகவுள்ளது என்றும் அரசியல்வாதிகளுக்கென்று கொள்கைகளை வகுக்க, மதத்தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .