2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கின்றனர்’

Editorial   / 2019 மே 13 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்றத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர், முஸ்லிம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மிகவும் பயத்துடன் வாழ்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனவே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் எலினா பீ. டெப்லிஸ்ட் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் சக்திகளை கண்டுபிடிக்க, அரசாங்கம் தீவிர அவதானத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை விட இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் முற்றிலும் மாறானதொன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .