Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 08 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளினூடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து, இன்று (08) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது,நாட்டில் நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ளமைக்கு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல், ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள முறையற்ற செயற்பாடே காரணம் என்றும் இவருடைய இந்தச் செயற்பாடு, தற்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் வெளிப்படுத்தப்படும் நிலையில், அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி முயன்று வருவதை ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து சபாநாயகரே தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago