Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 174 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 153 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 110 பேரும் நேற்றைய தினம் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டியில் 52 பேரும், இரத்தினபுரியில் 50 பேரும், நுவரெலியாவில் 26 பேரும், கேகாலையில் 21 பேரும், காலியில் 20 பேரும், மாத்தறையில் 19 பேரும், குருநாகலில் 15 பேரும், புத்தளத்தில் 08 பேரும அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் தலா ஒருவர் இருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டதின் அவிசாவளை பிரதேசத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அவிசாவளை பிரதேசத்தில் நேற்றைய தினம் 26 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், அவிசாவளை பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்ட பிரதேசமாகவே உள்ளதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago