2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மூர்க்கத்தனமாக நாயை தாக்கியவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலவான பகுதியில் சிறிய நாயை  கடுமையான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த நாய் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு கத்திக்கொண்டிருந்த வீடியோ கடந்த நாள்களில் சமூக ஊடகங்களில் வெளியானது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நீதிப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுக்குமாறு கலவான பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .