2025 ஜூன் 25, புதன்கிழமை

மேம்பாலங்கள் அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி

Editorial   / 2019 மே 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹூவலை மற்றும் கெடபே சந்திக்கருகில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு அமைச்சரவையிரல் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

கொஹுவலை மற்றும் கெடபே ஆகிய பகுதிகளில் தினசரி ஏற்படும் வாகன நெருக்கடிகள் குறித்தே இந்த தீர்மானம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரியாவின் நிதியுதவியுடன் இந்த கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி மற்றும் கடன் ஒப்பந்தங்களைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்துக்கானக் கட்டுமானப் பணிகளை ஹங்கேரியா Betonutepito என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் தற்பொழுது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்துக்கமைவாக, ஹங்​கேரிய அரசாங்கத்திலிருந்து, யூரோ 52 மில்லியன் நிதி ஒதுக்கப்படவுள்ளமையும் குறிப்படத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .