2025 ஜூன் 23, திங்கட்கிழமை

​மேயர் உள்ளிட்ட எழுவரின் பிணை மனு நிராகரிப்பு

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அநுராதபுரம் மாநகர சபை மேயர் மற்றும் வடமேல் மாகாண முன்னாள் தவிசாளர்  உள்ளிட்ட 7 பேரை, பிணையில் விடுதலை செய்யக்கோரி , சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தம்புத்தேகம நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஏ. ரமீலா நதீஷானி நேற்று (24) நிராகரித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர்களை ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின், அநுராதபுர மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஆனந்த வெஹேரகொடவின் வீட்டின் மீது, குண்டுத் தாக்குதல் நடத்தி, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .