2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாயப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 10 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு  தொழில் வாயப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்த போது மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய  குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் தொழில்வாய்ப்பு இன்றி காணப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் தொழில் வாய்ப்பு பெற்ற 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் விவரங்கள் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .