2025 ஜூன் 11, புதன்கிழமை

மேலும் 219 பேர் கைது

J.A. George   / 2022 மே 18 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பதிவான சம்பவங்கள் தொடர்பில் 883 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில், 412 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 365 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ராஜபக்ஷ ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை தாக்கி உடைத்ததில் வன்முறை வெடித்தது.

பின்னர்  அந்தக் குழுவினர் காலி முகத்திடலுக்குச் சென்று, அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அமைக்கப்பட்டிருந்த எதிர்பார்களின் கூடாரங்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவானதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து தாக்கப்பட்டதோடு, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10