2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மேலும் 5,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியுதவி

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற, மேலும் 5,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி வழங்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

11 வருடங்களுக்கு பின்னரே, புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக் காலம், 15,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டு வந்ததுடன், தற்போது புதிதாக 5,000 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, புலமைப் பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 20,000 வரை அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .