2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மேலும் 500 பேர் நாட்டுக்கு; 6267 பேர் தனிமைப்படுத்தலில்

J.A. George   / 2021 ஜனவரி 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து மேலும் 434 பேர் இன்று(12) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் கட்டாரில் இருந்து 311 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 46 பேரும் மாலைத்தீவில் இருந்து 76 பேரும் சீனாவில் இருந்து ஒருவரும் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியம், துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேலும் 70 பேர் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 75 தனிமைப்படுத்தல் முகாம்களில் 6267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .