Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 17 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர், கைக்குண்டுடன் நேற்று (16) இரவு, கோப்பாய் பகுதியில் வைத்து, யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் “சின்னவன்” எனப்படும் சந்தேக நபர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவில் பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து தாலிக்கொடி,நான்கு சங்கிலிகள், கைக்குண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago