2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் பொலிஸார் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா, நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது நேற்று (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளளதுடன், சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய் பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அந்த நபரைத் தேடிய போது, பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த முரண்பாடு தொடர்பாக விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .