2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் வாள்வெட்டு சந்தேக நபர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கடந்த வருடம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் கூறினர். 

கைதானவர் அல்வாய் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது. அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்கே நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதன் போது ஜந்தாவது சந்தேக நபர் என கூறப்பட்ட இளைஞன் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். அவரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .