2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

Freelancer   / 2024 மார்ச் 22 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள்  இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டினை ஆரம்பித்திருந்தனர். 

இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துவங்கி தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .