2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரூ.100 கோடி சொத்து: 3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி சிக்கினர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.100 கோடி சொத்து:  3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி சிக்கினர்

லஞ்​சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்​டில் சோதனை நடத்த வந்த பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்​ததை கண்டு திடுக்​கிட்​டனர்.

பிஹார் மாநிலத்​தில் ஊரக பணி​கள் துறை​யில் இன்​ஜினீய​ராக பணி​யாற்​று​பவர் வினோத் ராய், இவர்,  மது​பானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்​டங்​களில் நடை​பெறும் சாலைகள் மற்​றும் பாலங்​கள் கட்​டு​மானத்தை இவர்​தான் கவனித்து வந்​தார். ஒப்​பந்​த​காரர்​களிடம் இருந்து அதி​கள​வில் லஞ்​சம் வாங்​கு​வதை இவர் வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இது குறித்து பொருளா​தார குற்​றப்​பிரிவுக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் வீட்​டில் சோதனை செய்ய பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள் முடிவு செய்​தனர்.

இத்​தகவலை முன்​கூட்​டியே அறிந்த வினோத் ராய், வீட்​டில் இருக்​கும் லஞ்ச பணத்தை அழிக்க முடிவு செய்​தார். அதனால் அவரும், அவரது மனைவி பப்லி ராயும் சேர்ந்து இரவு முழு​வதும் ரூபாய் நோட்​டு​களை எரித்து சாம்​பலாக்​கி, கழிவு நீர் குழாய் வழி​யாக ஊற்​றி​யுள்​ளனர். ஒரு கட்​டத்​தில் கழிவு நீர் குழா​யில் அடைப்பு ஏற்​பட்டு விட்​டது. அவர்​களால் மேலும் பணத்தை எரிக்க முடிய​வில்​லை. அதற்​குள் பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள் வினோத் ராய் வீட்​டுக்​குள் புகுந்து சோதனையை தொடங்​கினர்.

எரிக்​கப்​பட்ட ரூபாய் நோட்​டுக்​கள் கழிவு நீர் குழாய்​களில் சிக்​கி​யிருந்​ததை அவர்​கள் கண்டு திடுக்​கிட்​டனர். ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை அவர்​கள் எரித்​திருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. அவர்​கள் வீட்​டில் நடத்​திய சோதனை​யில் பாதி எரிந்த நிலை​யில் ரூ.20 லட்​சம் பணமும், ரூ.40 லட்​சம் ரொக்​கம், ரூ.10 லட்​சம் மதிப்​பிலான நகைகள், ரூ.100 கோடி மதிப்​பில் 18 சொத்து ஆவணங்​கள், ரூ.6 லட்​சம் மதிப்​பிலான ஆடம்பர கைக்​கடி​காரங்​கள், 15 வங்கி கணக்கு புத்​தகங்​கள், வினோத் ராய் பெயரில் காப்​பீடு பாலிசிகள் ஆகியவையும் கண்​டெடுக்​கப்​பட்​டன. இதுகுறித்து அமலாக்​கத்​துறையும் விசா​ரணை நடத்​தவுள்​ளது. பணம் எரிக்​கப்​பட்​ட​தால், தடய​வியல் துறை​யினரின் உதவி நாடப்​பட்​டுள்​ளது. வினோத் ராயின் மனைவி பப்லி ராய் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இச்​சம்​பவம் பிஹார் மாநிலத்​தின் அரசுத் துறை​யில் லஞ்​சம் எவ்​வளவு தூரம் ஊடுரு​வி​யுள்​ளதை வெளிக்​காட்​டி​யுள்​ளது. அரசு அதி​காரி​கள் பலர், தங்​கள் அதி​காரத்தை தவறாக பயன்​படுத்தி மிக விரை​வில் கோடீஸ்​வரர்​களாகி விடு​கின்​றனர். இந்த விவ​காரம் ஊழலற்ற ஆட்சி என கூறிவரும் முதல்​வர் நிதிஷ் குமாருக்​கும் தர்​மசங்​கடத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X