2024 மே 20, திங்கட்கிழமை

ரூ.13,347 மில்லியன் நிலுவையில் உள்ளது

Freelancer   / 2024 மே 09 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, அரச நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனம் 13,347மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக  மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற  வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் சுயாதீன எதிரணி எம்.பி.யான  தயாசிறி ஜயசேகர எழுப்பிய  கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். 
 
இலங்கை மின்சார சபை,தனியார் நிறுவனம்,புகையிரத திணைக்களம்,இராணுவம்,கடற்படை,விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு  நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளன.

மின்சார சபை 3,529 மில்லியன் ரூபாய்,தனியார் நிறுவனம் ஒன்று  39 மில்லியன் ரூபாய், புகையிரத திணைக்களம் 2,544 மில்லியன் ரூபாய்,இராணுவம் 3,149 மில்லியன் ரூபாய்,விமானப்படை 4,011 மில்லியன்  ரூபாய் மற்றும் பொலிஸ் 75 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில்  13,347 ரூபாய் நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ளது  என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X