Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.பாரூக் தாஜுதீன்
ராடா நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்தார்கள் என்று நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) சட்டமா அதிபர் முன்வைத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்குரிய முன்னாள் எம்.பி டிரான் அலஸ், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித் தலைவர் எமில் காந்தன், ராடா நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் டொக்டர் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே இந்த நிதி மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் அனுமதியுடன் ராடா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்காண பணத்தை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணத்தின் மூலம் எந்தவொரு வீடும் கட்டிக்கொடுக்கப்படவில்லை என்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை கொலைச் செய்ய முயற்சித்தார் என்ற் குற்றச்சாட்டின் பேரில், எமில் காந்தனுக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தால் ஏற்கெனவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
54 minute ago
2 hours ago