Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்ட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று மாலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
மாலை 4.30 மணி அளவில் விசாரணை கைதிகள் சிறைக்கூட பிரிவில் இருந்தவர்கள் சாப்பாட்டுக்காக வெளியில் வந்தனர். அவர்களுடன் ராம்குமாரும் சாப்பிடுவதற்காக சிறை அறையில் இருந்து வெளியில் வந்தார். அப்போது திடீரென அங்கிருந்த மின்சார பெட்டியை உடைத்து வயரை பிடுங்கி வாயில் வைத்து கடித்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள வைத்தியசாலைக்கு ராம்குமாரை தூக்கிச் சென்றனர். பின்னர் ராயப்பேட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை பரிசோதித்த டொக்டர்கள் ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ராம் குமாரின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படுகிறது. பரிசோதனையை வீடியோவில் படம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ராயப் பேட்டை அரச வைத்தியசாலைக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
நேற்று இரவு ராம்குமாரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வைத்தியசாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி பொலிஸார் கலைத்தனர்.
இன்று காலையிலும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராம்குமாரின் தற்கொலை குறித்து திருவள்ளூர் பெண் நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணை நடத்தினார். காலை 9 மணி அளவில் புழல் சிறைசாலைக்கு சென்ற அவர் நேரில் விசாரணை நடத்தினார். ராம்குமாரின் குடும்பத்தினரிடம் அவர் விசாரணை நடத்த உள்ளார்.
ராயப்பேட்டை வைத்தியசாலையில் பதட்டம் நிலவுவதால் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரும்; உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நுழைவு வாயில் அருகிலேயே பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. அந்த பகுதிக்கு யாரும் சென்று விடாதபடி வாசலின் இரும்புக்கதவு இழுத்து உள்பக்கமாக பூட்டப்பட்டது.
கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர்கள் மனோகரன், அன்பு ஆகியோர் வைத்தியசாலையில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்திய செய்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago