2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

வழக்கின் தீர்ப்பினை அறிவிப்பதற்கு முன்னதாக, மேலதிக கருத்துகளை முன்வைப்பதற்காக குறித்த வழக்கு ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கானது நீதிபதிகளான சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்னால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .