2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படலாம் : பிரதி பணிப்பாளர் தகவல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின்  பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன   தெரிவித்துள்ளார்.

ரணிலின் உடல்நிலை குறித்து  வைத்தியர்  ருக்ஷான் பெல்லன, ஞாயிற்றுக்கிழமை (24) நடத்திய   ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

 அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவரது உடலில் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

 நீதிமன்ற அறையில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைபட்டதாலும், தண்ணீர் குடிக்காததாலும் ஏற்பட்ட சிக்கல்களால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர் கூறினார்.

இதன் காரணமாக, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவித்தார்.

எனவே அவரை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும். அது செய்யப்படாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதனால்தான் அவர் தற்போது பல சிறப்பு மருத்துவர்கள் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்.  அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X