2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும்’

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்குமானால், அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கு உரிமை இல்லாமல் போகுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டதாகவும், இதற்கமைய நிபந்தனைகளுடன் ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்த டலஸ் அலகப்பெரும ஐக்கிய ​தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமானால் அதில் எமக்குப் பிரச்சினை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .