2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரணிலுக்கு கை ஆதரவு கொடுக்குமா?

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) காலை கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்றக் குழுவுடன் மேலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (14) காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7