2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி

Mayu   / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, திருநாவல்குளம் பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
இன்று முற்பகல் 10.45 மணியளவில் திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை முச்சக்கரவண்டி ஒன்று கடக்க முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதிப் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. 

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.


காயமடைந்தவர்: முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த புகையிரத கடவை நீண்டகாலமாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், அங்கு சமிக்ஞை விளக்குகளோ அல்லது பாதுகாப்பு கேற்றுகளோ (Gate) இல்லாததே இவ்வாறான தொடர்ச்சியான விபத்துக்களுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .