2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 8ஆவது நாளாக தொடர்கின்றது

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று (03) 8ஆவது நாளாக தொடர்கின்றது.

தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்படும் வரை தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரயில் சாரதிகள், நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பள முரண்பாட்டை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .